Advertisment

வைரஸை உடம்பிலிருந்து வெளியேற்றும் உத்தி! -நம்பிக்கையூட்டும் பேராசியர்

நம் தற்காப்பையும் மீறி, நம் உடலுக்குள் கரோனா வைரஸ் புகுந்துவிட்டால்நாம் அடுத்துஉடனடியாக என்ன செய்யவேண்டும்? என்பதைச் சொல்லி சற்றே நம்பிக்கை ஊட்டுகிறார் ஒரு வேதியியல் துறைப் பேராசிரியர்.

Advertisment

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளால், எல்லோரும்திகிலில் உறைந்திருக்கும் இந்த நேரத்தில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறையின் தலைவரான பேராசிரியர் செ.கண்ணன் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

Advertisment

ffff

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதில் அவர்...’கொரோனா வைரஸ் மூக்கு வழியாக உடலினுள் செல்லக் கூடியது. இவ்வாறு மூச்சுக் காற்றில் கலந்து செல்லும் போது முதலில் மூக்கில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மூக்கில் அடைப்பு ஏற்படும். இந்த அறிகுறி தெரிந்தவுடன் எந்த மூக்கில் அடைப்பு தென்படுகிறதோ, அதற்கு அடுத்த மூக்கு துவாரத்தை விரலால் அழுத்தி பிடித்துக் கொண்டு ஆள்காட்டி விரலை அடைப்பு ஏற்பட்ட மூக்கில் மேல் அழுத்தமாய் வைத்து மூச்சுக் காற்றை வேகமாக வெளியேற்ற வேண்டும்.

அப்படி வெளியேற்றும் போது ஆள்காட்டி விரலை விட்டு விட்டு அழுத்த வேண்டும். இப்படி அழுத்தும் எண்ணிக்கை ஒரு நொடிக்கு 2 முதல் 4 முறை இருத்தல் அவசியம். இந்த முறையை அரை நிமிட அளவிற்குத் தொடரலாம். அடைப்பின் தன்மையைப் பொறுத்து கால அளவை நிர்ணயிக்கலாம். இவ்வாறு செய்வதால் எடை மிக குறைந்து காற்றின் அழுத்தம் தாங்காமல் மூச்சில் இருந்து வைரஸ்வெளியேறிவிடும்.

இதையும் தாண்டி தொண்டைப் பகுதிக்கு சென்றுவிட்டால், தொண்டையில் அரிப்பு, எரிச்சல் ஏற்படும். இப்படிப்பட்ட அறிகுறி இருந்தால் சமையலுக்குப் பயன்படுத்தும் சீரகத்தை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதன் மூலம், வருகின்ற சாறை எரிச்சல் இருக்கும் இடத்தில் படும்படி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தொண்டையில் இருந்து வைரஸ் வெளியேறிவிடும்.

இப்படி செய்யும்போது தண்ணீர் அருந்துதல் கூடாது. இந்த உத்தியைக் கையாண்டால் வைரசை உடலிலிருந்து ஆரம்பத்திலேயே வெளியேற்றிவிடலாம். இந்த வைரஸ் நுரையீரலுக்குச் சென்று விட்டால் அது 14 நாட்கள் தங்கி இருந்து சளி தொல்லை காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டும். அதற்கு முன்னால் இதை வெளியேற்றி விட்டால் நாம் வைரஸில் இருந்து தப்பித்து விடலாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

chemistry corona virus Kanimozhi meets family of driver Manikandan Tirunelveli Professor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe