Skip to main content

கரோனா பாதிப்பு என வீடியோ வைரலாக பரவியதால் சரக்கு ரயிலில் விழுந்து வாலிபர் தற்கொலை!!!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சரக்கு ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா(35). கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பு தமிழகம் திரும்பிய முஸ்தபா, மதுரை பீ.பீ. குளம், முல்லைநகரில் உள்ள தனது அம்மாவீட்டில் தங்கியுள்ளார். சளி, இருமல் மற்றும் சோர்வு காரணமாக இவருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய அக்கம், பக்கத்தினர் சுகாதாரத்துறை மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 

 Youngster falling into cargo train as viral video spreads


சுகாதாரத்துறையினர் முல்லைநகர் வந்து இவரிடம் விசாரணை நடத்தி, முஸ்தபாவையும் அவரது தாயாரையும் 108 மூலமாக மதுரை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தனர். ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு மேல் 108 ஆம்புலன்ஸ் வராததால் அந்த பகுதி பொதுமக்களே சரக்குவாகனம் ஒன்றை தயார் செய்து இவர்களை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு கரோனா தொற்று இல்லை என கூறி வீட்டிற்கு அவரையும், அவரது தாயாரையும் அனுப்பிவைத்தனர். 

இந்தநிலையில் இவர் கரோனாவில் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி பொதுமக்கள் எடுத்த வீடியோ வைரலாக அனைவருக்கும் பரவியது. இதனால் முஸ்தபா மன வேதனையடைந்தார். நேற்று காலை மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி நடந்து வந்த அவர், கப்பலூர் டோல்கேட் அருகே வந்தபோது சென்னையிலிருந்து நெல்லைக்கு சீனி மூட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு ரயில் வருவதை கவனித்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்குரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கரோனா பாதிப்பு என வைரலாக பரவிய வீடியோவால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்த நிலையில் மீண்டும், மீண்டும் வதந்தி பரவியதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.