Skip to main content

முதலில் அடி பின்புதான் விசாரணை... சாலைகளில் லத்தியை சுழற்றும் போலீஸ்...!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

  

 


கரோனா தாக்கத்தால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே வரலாம் என அரசு கூறியுள்ளது. அதனை காரணம் காட்டி இளைஞர்கள் பலர் தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சுற்றுகின்றனர். இதனை ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25ந் தேதியில் இருந்து காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.  
 

பின்னர் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றிக்கொண்டு இருந்தவர்களை நோக்கி லத்தியை சுழற்ற தொடங்கியுள்ளது போலீஸ்.


இருசக்கர வாகனத்தில் சாலையில் வந்தாலே ஏன் வருகிறார்கள், எதற்காக வருகிறார்கள் என அறிந்துக்கொள்ளாமல் பெரும்பாலான போலீஸார் அடித்து துவைக்கிறார்கள். 

 

thiruvannamalai

சில மாவட்டங்களில் சில அதிகாரிகள் வாகனம் ஓட்டி வருபவர்களிடம், இது தவறு, இப்படி  வெளியே சுற்றாதீர்கள் என கையெடுத்து கும்பிட்டு அறிவுரை சொல்லி பின்பு எச்சரித்தும் அனுப்புகிறார்கள். பெரும்பாலான இடங்களில் விசாரணையே கிடையாது முதலில் லத்தியால் நாலு அடி அடித்துவிடுவது, பின்பு எதற்காக வெளியே வந்தாய் என விசாரிப்பதை வாடிக்கையாக்கி உள்ளனர் சிலர்.



 

அதுமட்டும் இல்லாமல் எதற்காக வெளியே வந்தோம் என பதில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களை தோப்புக்கரணம் போடவைப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது, வழக்கு போடுவது என்கிற செயல்களில் ஈடுப்படுகின்றனர் காவல்துறையினர். இதுவே சரியான நடைமுறை. இதனை இரண்டு நாளைக்கு தொடர்ந்து செய்தாலே யாரும் வெளியே வரமாட்டார்கள். அப்படி பெரும்பாலும் செய்வதில்லை.


 

சென்னையில் ஒரு மருத்துவர் மருத்துவனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை மடக்கிய ஒரு காவல்துறை ஆய்வாளர் அவரது வண்டியை நிறுத்தி லத்தியால் அடித்தார். அவர் பதறி நான் மருத்துவர் என்றபின், அதை முதலில் சொல்லக்கூடாதா என கேட்டுவிட்டு, மன்னிப்பு கூறி அனுப்பினார். இது ஒரு உதாரணம் தான். இப்படி மருந்துக்கடை உரிமையாளர், ஊடகத்துறையினர் என ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களையும் தாக்குகிறது போலீஸ். கேள்வியே கேட்காமல் அடித்துவிட்டு பின்பு முதலிலேயே சொல்ல வேண்டியது தானே எனக்கேட்பது எந்த விதத்தில் நியாயம்?


அடித்துவிட்டு விசாரிப்பதற்கு பதில் விசாரித்துவிட்டு காரணமே இல்லாமல் வெளியே வருபவர்களை அடிக்கலாம். அதைவிட்டுவிட்டு எடுத்ததும் அடிப்பேன் என்பது என்ன நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர். 


உயிர் பயம் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது தேவையில்லாமல் யாராவது வெளியே வருவார்களா? அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை, மருந்துக்கடைக்கு வாங்க வருபவர்களையும் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர் மக்கள். நோய் அச்சத்தை விட இவர்கள் நடந்துக்கொள்ளும் முறையே அச்சமாக இருக்கிறது என்று காவல்துறையினரின் செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் அதிருப்தி  தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.