Skip to main content

இங்கே வெளியாட்கள் வர அனுமதியில்லை... மக்கள் அமைத்த தடுப்பு வேலி... கரோனாவுக்கு எதிரான ஒரு கிராமத்தின் போராட்டம்...!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

கொள்ளை நோய் கரோனாவைத் தடுக்க தேசமெங்கும் மக்களைத் தனிமைப்படுத்துகிற வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணியிலிருந்து அவசர நிலைப் பிரகடனம் செயல்படத் தொடங்கிவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை அது தொடர்பான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. மாவட்டங்கள் கூட முடக்கப்பட்டு இதரப் போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் மக்களைக் கூட விடாமல் தனிமைப்படுத்தி கரோனாவைக் கட்டுப்படுத்துகிற நோக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

 

Corona virus issue - village awareness

 



ஆனால் இதை மக்கள் சிலர் அலட்சியப்படுத்துகின்றனர். தேவையில்லாமல் சிலர் வெட்டியாக வெளியே சுற்றிவரத் தொடங்கினர். தற்போது அவைகளைக் கட்டுப்படுத்துகிற வகையில் காவல் துறை தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும் மக்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காத வரை தனித்திருத்தல் சாத்தியமில்லை தான். இத்தனைக்குமிடையே கல்வியறிவில் முன்னேறிய நகரங்கள் கூடச் செய்ய முடியாத, மறந்த, காரியத்தை , செயல்பாட்டைச் சமூக விலக்கை கடைபிடித்து தங்களின் மக்களைக் காப்பாற்றுவதில் முன்னோடியாக மாடலாக, தேசத்திற்கே முன் மாதிரியாகியிருக்கிறது தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்ந்தமரம் நகரமருகேயுள்ள தன்னூத்து என்கிற கிராமம்.

 

Corona virus issue - village awareness



சுமார் 700 வீடுகளைக் கொண்ட விவசாய கூலி மக்களையுடைய 3500 எண்ணிக்கையிலான ஜனத்தொகையைக் உள்ளடக்கிய இந்தக் கிராமம், முக்கியப் பகுதிகளிலிருந்து, ரிமோட் ஏரியாவில் உள்ளது. கிராமம் தானே என்று நினைப்பதற்கில்லை. இங்குள்ள இளைஞர்கள் கொரோனாவின் தீவிரத் தன்மையை ஊருக்குச் சொல்லி அந்தத் தடுப்பு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். தங்களின் கிராம எல்லையில் தடுப்பு வேலியை அமைத்து அதில் தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு போர்டையும் வைத்துள்ளனர். உள்ளூர் நபர்களைத் தவிர வெளியூர்க்காரர்கள் கிராமத்திற்குள் வர கண்டிப்பாக அனுமதியில்லை என்று பார்வையில்படும்படி எழுதியுள்ளனர். ஒரு வேளை உள்ளூர்காரர்கள் வெளியே சென்று விட்டு ஊருக்குள் வர வசதியாக தடுப்பு வேலியருகில் சோப்பு மற்றும் தண்ணீர் வாளியையும் வைத்திருக்கின்றனர். அறிவிப்பின்படி கை கால்களை சோப்பு கொண்டு கழுவி விட்டு ஊருக்குள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைப் பார்த்து வியந்துபோன அதிகாரிகள் சமூக விலக்கு, விழிப்புணர்வு ஏற்பட்டு முன் மாதிரியாகிப் போன தன்னூத்துக் கிராம மக்களைப் பாராட்டியதுடன் அனைத்து கிராமங்கள், நகரங்கள் இது போன்று செயல்பட்டால் கொடூர கரோனாவை விரட்டியடிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். நமக்கான பாதுகாப்பு நாமேதான் என்பதை உணர்ந்திருக்கிறது தன்னூத்து கிராமம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.