Skip to main content

உணவு இல்லாமல் தவிக்கும் சாலையோர மக்கள்... அரசு நடவடிக்கை எடுக்குமா?

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

கரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவு மத்தியரசாலும், 144 தடை உத்தரவு மாநில அரசாலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற எந்த தேவைக்கும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது எனச்சொல்லப்பட்டுள்ளது. 

அதோடு கோயில்கள், சர்ச், மசூதி என அனைத்து வழிப்பாட்டு தலங்களும், மக்கள் கூடும் இடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர்.
 

tm





திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சுமார் 500க்கும் அதிகமான வயதான யாசகர்கள் உள்ளனர். இவர்களுக்கு கிரிவலப்பாதை மற்றும் சில ஆஸ்ரமங்கள் காலை, மதியம் என இலவசமாக உணவு வழங்கி வந்தன. அரசாங்கத்தின் தடை உத்தரவால் கிரிவலப்பாதையில் உள்ள யாசகர்கள் உணவு இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தன்னார்வலர்கள் உணவு வழங்க செல்கிறோம் எனச் சொன்னாலும் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள போலீஸார் பலவிதமான கேள்விகளை எழுப்பி, இது பாதுகாப்பற்றது எனச்சொல்லி விரட்டுவதால் அவர்களும் நொந்துப்போய் உள்ளனர். 

இதுப்பற்றிய தகவலை சில தன்னார்வ அமைப்புகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றதன் விளைவாக இப்போது அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் யாசகர்கள் உணவில்லாமல் பட்டினியாக கிரிவலப்பாதையில் படுத்துக்கிடக்கின்றனர்.


 

இவர்களைப்போல் நகரத்தின் பலயிடங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், யாசகர்கள் உணவுயில்லாமல் சுற்றி சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை தேவையான உணவை கூட ஏற்பாடு செய்யாமலும், செய்பவர்களையும் தரவிடாமல் தடுக்கிறது காவல்துறை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.