Skip to main content

கர்நாடக எல்லையில் தவித்த தமிழகர்கள்! மீட்ட அதிகாரிகள்! - நெகிழ்ச்சி சம்பவம்

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைக்க  இந்தியா முழுவதும் சென்ற 24 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தமிழக மக்களுக்கு தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இன்று மாலை  27 டிராவல்ஸ் வாகனங்களில் சுமார் 669 பேர் திடீரென வந்து இறங்கினார்கள்.

 

corona virus issue - tamilnadu people rescued in Karnataka

 



கர்நாடகா ஓட்டுனர்கள் நீங்கள் இனிமேல் நடந்து போய்க் கொள்ளுங்கள் தமிழ் நாட்டுக்குள் நாங்கள் வரமாட்டோம் என கூற அந்த 669 பேரும் அதிர்ச்சியாகி எங்களை நிலப்பகுதியான சத்தியமங்கலம் வரை கொண்டு வந்து விடுவதாகத்தானே பேசினீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட, அங்கு ரோந்து வந்த தமிழ்நாட்டின் ஆசனூர் காவல்துறையினர் அவர்களை விசாரணை செய்தனர். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் அனைவரும் ராமநாதபுரம்  மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த  மீனவர்கள் என்பது. இவர்கள் அனைவரும் ஒரு மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் மங்களூருக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றதாகவும் தெரியவந்தது.

கடந்த முப்பது வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் கர்நாடகா கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஒரு முறை மங்களூர் வந்தால் இரண்டு மூன்று மாதங்கள் கடலில் மீன் பிடித்து விட்டு பிறகு சொந்த ஊர் ராமேஸ்வரம் சென்று விட்டு சில நாட்கள் கழித்து திரும்ப வருவார்கள். கர்நாடகா கடலில் இருந்து மகாராஷ்ரா கடல் பகுதி வரை பல நாட்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து திரும்பி வருவார்கள். பிரதமர் மோடி ஊரடங்கு தடை உத்தரவு போட்ட நாளில் கடலுக்குள் இருந்துள்ளனர். பிறகு திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகியுள்ளது. கடலிலிருந்து திரும்பி வந்தவர்களை நீங்கள் உங்களது தமிழ்நாட்டுக்கே போய் விடுங்கள் என அவர்களது ஒப்பந்த நிறுவனங்கள், இந்த டிராவல்ஸ் வாகனங்களில் ஏற்றி அனுப்பி விட்டது. 

தற்போது கரோனா வைரஸ் காரணமாக தங்களது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனுக்கு தகவல் கொடுக்க அவர் மருத்துவ குழுவுக்கு தகவல் கொடுத்து, பரிசோதனை செய்ய உத்திரவிட்டார். பிறகு அந்த  இடத்திற்கு வந்த தாளவாடி சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள்  வாகனத்தில் வந்த அனைவருக்கும் மருத்துவ சோதனை செய்ய தொடங்கினார்கள். இதற்கிடையே தமிழக அரசின் கவனத்திற்கு இத்தகவலை மாவட்ட எஸ்.பி.யும் கலெக்டர் கதிரவனும் கொண்டு சென்றனர். இதன் பிறகு இன்று இரவுக்குள் 669 பேருக்கும் அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அரசு உத்தரவுப்படி 16 அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் அவர்களை ஏற்றி இராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இது பற்றி நம்மிடம் பேசிய எஸ்.பி. சக்தி கணேசன் இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதில் யாருக்கெல்லாம் காய்சல் அறிகுறி இருக்கிறதோ அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மற்றவர்கள் பேருந்து மூலம் அனுப்பப்படுகிறார்கள். ஒவ்வொரு பேருந்திலும் போலீசாரும் உடன் சென்று தமிழகத்தில் உள்ள எந்த மாவட்ட எல்லையிலும் அவர்கள் தடுக்கப்படாமல் நேராக ராமநாதபுரம் கலெக்டரிடம் இந்த 669 பேரும் பாதுகாப்பாக நாளைக்குள் ஒப்படைக்கப்படுவார்கள்" என்றார்.

எங்கே நம் ஊருக்கு செல்வோமா? மனைவி குழந்தைகள், தாய், தந்தை உறவுகளை பார்ப்போமா? என்ற பீதியுடன் இருந்த மக்களுக்கு அச்சத்தை போக்கி சொந்த ஊருக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்த ஈரோடு கலெக்டர் கதிரவன், எஸ்.பி. சக்தி கணேசன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள் தான்.

இது டிஜிட்டல் இந்தியா என்று தனக்கு தானே கூறிக் கொண்டு ஒரே நாள் இரவில் உத்தரவை போட்டு விட்டார் பிரதமர் மோடி. ஆனால் பல நாள் இரவுகள் கடந்த பிறகே கரை திரும்பும் இது போன்ற மீனவர்கள் வாழ்வு போல இந்த இந்திய மண்ணில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் என்ற எதார்த்த நிலையையும் ஆட்சியில் இருப்பவர்கள் உணரவேண்டும். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.