Skip to main content

கரோனா அச்சத்தால் பிரசவம் பார்க்க தனியார் மருத்துவமனை மறுப்பு! கலெக்டரிடம் புகார்!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தெரியவந்ததும் அவர்களை ஆய்வு செய்து கரோனா சோதனை செய்தபோது 46 பேருக்கு கரோனா  வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதில் திண்டுக்கல் மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேகம்பூர் மற்றும் மக்கான்தெரு, பூச்சி நாயக்கம்பட்டி, ஜமால் தெரு உள்பட சில பகுதிகளில் 35 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்ததன்பேரில், அப்பகுதிகளை போலீசார் சீல் வைத்து முடக்கியும், சில பகுதிகளை  தனிமைப்படுத்தி கண்காணித்தும் வருகின்றனர்.

 

 corona virus impact - Private hospital refuses to  childbirth - Collector Inquiry



அப்பகுதியில் உள்ளவர்களுக்கு உடல்நலம் மற்றும் பெண்களுக்கு பிரசவம் போன்ற மருத்துவ சிகிச்சை உதவிகள் செய்யக்கூட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பலர் தயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லி மாநாட்டிற்கு போய்விட்டு வந்தவர்களில் பலருக்கு கரோனா வந்துள்ளது என்பது உண்மைதான். அதற்காக நகரில் உள்ள ஒட்டுமொத்தவர்களையும் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
 

nakkheeran app



அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், "தனது உறவினரான பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தவருக்கு திடீரென கடந்த இரண்டு நாளைக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது. உடனே நாங்கள் எப்போதும் பார்க்கக்கூடிய நாகல் நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்குள்ள மருத்துவர்கள் பிரசவம் பார்க்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன்பின் நகரில் உள்ள சில தனியார் மருத்துவமனைக்கு சென்றும் கூட பிரசவம் பார்க்க மறுத்துவிட்டதால், கடைசியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சேர்த்து அந்த பெண்ணுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதுபோல் சில கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்காததால் அரசு மருத்துவமனைக்கும் போயிருக்கிறார்கள். 

சில ஸ்கேன் சென்டர்களில் ஸ்கேன் எடுப்பதில்லை. மொத்த வியாபாரிகளும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருபவர்களும்கூட முஸ்லிம் சிறு வியாபாரிகளுக்கும் பொருட்கள் கொடுக்க மறுக்கிறார்கள். அதுபோல் தாய்பிள்ளை போலவும், மாமன் மச்சான் போலவும் பேசி வந்த மற்ற சமூகத்தினர் பெரும்பாலனோர்கூட, இந்த கரோனா வைரஸால் பேசவே மறுக்கிறார்கள். ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு எங்கள் இஸ்லாம் சமுதாய மக்களை ஒதுக்கி வைப்பவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளரான யாசர் அராபத் இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிடம் சொல்லியுள்ளார்.


இதுதொடர்பாக கலெக்டரிடம் கேட்டபோது, மாவட்டத்திலுள்ள பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய ஊர்கள் இருக்கக்கூடிய சில பகுதிகளை கரோனாவால் தனிமைப்படுத்தி, அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம். அதில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டார்கள் என்றால் அங்குள்ள நம்பரில் தொடர்பு கொண்டால் உடனே ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

 

c



அதுபோல் அந்தப் பகுதிகளுக்கு நடமாடும் ஏ.டி.எம். மெஷின் போய் வருகிறது. ஒரு ஏரியாவில் எருமைப்பால் வேணாம், பசும்பால்தான் வேண்டும் என்று சொன்னதின் பேரில் அதையும் கொடுக்க சொல்லி வருகிறோம். அந்த அளவுக்கு  தனிமைப்படுத்தபட்டவர்கள் மனதளவிலும் பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.


அப்படி இருக்கும்போது, ஒரு பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் பிரசவம்  பார்க்கவில்லை என்று புகார் வந்ததைத் தொடர்ந்து, விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அதுபோல் இஸ்லாம் மக்களை புறக்கணிக்கிறார்கள் என்ற தகவல் வந்தது, அதையும் தீவிரமாக  விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலுக்கு பிறகு 100 நாள் வேலைக்கு ரூபாய் 400 ஊதியம் கிடைக்க வழி செய்யப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள சிபிஎம் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய  செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற தலைவர் உலகநாதன் வரவேற்றார். ஒன்றியபெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்டகவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார் நத்தத்திற்கு வாக்குகள் சேகரிக்க வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கும் கிராம மக்கள்பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

அதன்பின்னர் வாக்காள மக்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, கிராமங்களில் வறுமையை ஒழித்தது நூறு நாள்வேலை திட்டம் தான். நூறுநாள் வேலை திட்டம் மூலம் வறுமையை மட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மீண்டும் வந்தால் நூறுநாள் வேலை திட்டத்தை முற்றிலும் ஒழித்துவிடும். அதன் பின்னர் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும்தான் இருக்கும். இந்த நிலைமை வராமல் இருக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்து அவரை  அமோக வெற்றியை பெறச் செய்ய வேண்டும்.

கடந்த வருடம் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த 110பேருக்கு ஒரு பைசா செலவில்லாமல் கூட்டுறவுத்துறையில் ரேசன்கடை பணியாளர்களாக பணியமர்த்தினேன். இதுபோல ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் கல்விக்கட்டணம் வழங்கியதோடு தேர்வு கட்டணமும் வழங்கியதால் ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராமப்புற ஏழைகளின் சிரமங்கள் குறைந்தது. தேர்தலுக்கு பிறகு நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகள் அனைவருக்கும் ரூ.400 ஊதியமாக கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார்.

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

அதனை தொடர்ந்து செட்டியாபட்டி, காந்திகிராமம் ஊராட்சிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த பின்பு தொப்பம்பட்டி ஊராட்சிக்கு வந்த போது தொப்பம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி மற்றும் அருந்ததியர் காலனியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களையும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களையும் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இங்குள்ள மக்கள் தங்களுக்கு வீடு வசதி வேண்டுமேன கோரிக்கை விடுத்துள்ளனர். நான் ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்கிறேன். தேர்தல் முடிந்தபின்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தாள் அன்று தொடங்கப்பட உள்ள கலைஞரின் கணவு இல்ல திட்ட மூலம் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  ரூ.35ஆயிரம் கோடியை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வருடத்திற்கு ஒருலட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

கடந்த10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது திண்டுக்கல் மாவட்டம் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது வாங்கியது. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு நூறு நாள் திட்டத்தை முடக்கும் வண்ணம் 1 லட்சம் கோடிநிதி வழங்குவதற்கு பதிலாக 60 ஆயிரம் கோடியை மட்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கூலியாக வழங்கியுள்ளது. பாக்கியுள்ள 40 ஆயிரம் கோடியை வழங்கினால்தான் நூறு நாள் வேலை திட்டபயனாளிகளுக்கு முழுமையான கூலி வழங்க முடியும். இதை மத்தியில் ஆளும் பாஜகஅரசு வழங்க மறுப்பதோடு நூறுநாள் வேலை திட்டத்தையும் முடக்க நினைக்கிறது. உங்களுக்கு நூறு நாள் வேலை திட்டம் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நூறு நாள் வேலை திட்டமும் தொடர்ந்து கிடைக்கும்” என்றார்.

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

பஞ்சம்பட்டி பாஸ்கா மைதானம் முன்பு பிரச்சாரம் செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு வேட்பாளருடன் சென்று டீ குடித்ததோடு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.