Skip to main content

கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறினால் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் -நாராயணசாமி பேட்டி!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

 narayanasamy


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வியாழக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 

அப்போது அவர், "புதுச்சேரி காவல்துறை பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று பரிசோதனை நடைபெற்றதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்கிறது. புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் பணியாற்றிய மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு நோய்த் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 

பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இந்த நோய்த்தொற்றுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும், சமூக இடைவெளியைப் கடைப்பிடிக்கவேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். ஆனால் ஏற்கனவே பல மாநில அரசுகள் வருவாய் இழந்துள்ளது. அதனால் இரண்டு மாத வருவாய் வழங்கிட வேண்டுமென்று கேட்டுள்ளோம். இந்நிலையில் பிரதமர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் பல சலுகைகள் வழங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசு செலவு போக மீதம் உள்ளவை விவசாயிகள், தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்குவதாக கூறி இருக்கிறார்கள். 

புதுச்சேரியில் நிதி தட்டுப்பாடு இருந்தாலும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும்,  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் கிராமப்பகுதிகளில் 18,000 பேர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். சுற்றுலாத்துறை தற்போது முடங்கி உள்ளது. அதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது குறித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும். 


தமிழ்நாட்டில் கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நமது அண்டை பகுதிகளான விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில்  அதிக அளவில் நோய்த் தொற்றுகள் உள்ளது. அதனால் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. வியாபாரிகள் மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாகக் கடை திறக்க அனுமதி கோரி உள்ளார்கள். அதுகுறித்து விரைவில் அறிவிப்போம். கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருபுறம் நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும், இன்னொரு புறம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கான திட்டங்களையும் நாங்கள் வகுத்து வருகின்றோம். மாநில அரசின் ஒட்டுமொத்தமான செயல்பாடு இந்த நோய்த் தொற்றைத் தடுக்கும் நோக்கிலே உள்ளது. 
 

 

மூன்றாவது கட்டமாக மாறினால் அது சமூகப் பரவலாக மாறும். சமூகப் பரவலாக மாறினால் அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். தொற்று உள்ளவர்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் நோய்த்தொற்று அதிகரித்தால் அவர்களைச் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே தற்போது உள்ள நடைமுறையாக உள்ளது. புதுச்சேரியில் தற்போது பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கிறார்கள். இருந்தபோதும் மாலை நேரங்களில் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே நடமாடுகின்றனர். சகஜ நிலைக்கு நாம் மாறினால் கூட மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டும், வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும், விழாக்கள் தவிர்க்கப்படவேண்டும். இது இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது". இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.