Skip to main content

மதுரையில் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பிலிருந்த நபர்களைக் கண்காணிக்க தனிக்குழு - மதுரை மாவட்ட ஆட்சியர்

Published on 24/03/2020 | Edited on 25/03/2020

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த நபரோடு தொடர்பிலிருந்த 60 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்தார். 

 

 corona virus issue - Madurai district collector press meet

 



தமிழக அரசின் 144 தடை உத்தரவு குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த நபர் அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா தனிப்பிரிவில் வெண்டிலேட்டரின் உதவியின்றி மிக இயல்பாக உள்ளார். பல்வேறு வகையான உடற்கோளாறுகள் அவருக்கு முன்னரே உள்ளன என்பதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவரது தொடர்புகள் குறித்த அனைத்து விபரங்களும் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு ஏற்பட்ட நோய்த் தொற்று குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 9-ஆம் தேதி பக்கத்து வீட்டார் திருமணத்தில் அவர் பங்கேற்றுள்ளார். அந்நபரின் வீடு அருகே மற்றும் அந்தத் தெரு முழுவதும் தற்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரமாய் பராமரிப்பதற்கான பணிகளைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அவர் வழக்கமாகச் செல்லக்கூடிய பள்ளிவாசலையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். அவருடன் நெருக்கமாக இருந்த குடும்ப உறவுகள் அல்லாத 60 நபர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தவிருக்கிறோம். அறிகுறி இல்லாத நபர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளோம். மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கரோனா தொற்று அறிகுறியுடன் ஏழு பேர் தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையின் தனிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நலம் குறித்த மேல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். வெளிநாட்டிலிருந்து மதுரை மாவட்டத்திற்கு 439 பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது வேண்டுகோள் அல்ல, அரசின் உத்தரவு என்றே அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகள் எதுவும் பாதிக்கப்படாத வண்ணம் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். காவல்துறை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து நடைமுறைகளும் மதுரை மாவட்டத்தில் அமல்படுத்தப்படும். மதுரையிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஷிப்ட் முறையில் 24 மணி நேரம் பணிபுரிகின்றனர். தற்போது மதுரைக்கு வரும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்படும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சாலையோர வணிகமும் தடை செய்யப்படும். சமூக வலைத்தளங்களில் கரோனா குறித்து தவறான தகவல்கள் அனுப்புவதைத் தடுக்க காவல்துறையின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.