Skip to main content

முதியவர்களுக்கு வீட்டுக்கே சென்று உதவும் போலீஸ்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளான இன்று, வயதானவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக உதவிக்கு யாருமற்ற முதியோர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.

 

 Corona virus issue - Erode police

 



இந்த நிலையில் ஈரோடு மாவட்ட காவல்துறை ஏற்கனவே ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் பெயர் ஹலோ சீனியர்ஸ். வயதானவர்கள், குடும்பத்தினரால் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள், தங்களுக்கு சட்ட ரீதியாக மற்றும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் இந்த திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் போலீசார் நேரடியாக அந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு என்ன பிரச்சனை என விசாரித்து அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக ஒன்றுதான் இந்த ஹலோ சீனியர்ஸ். 

இத்திட்டத்தை ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தொடங்கிவைத்தலிருந்து, சுமார் நூற்றுக்கணக்கான முதியோர்கள், ஆதரவற்றோர் இதன்மூலம் பயன்பெற்றுள்ளனர். தற்போது கரோனா வைரஸ்  ஊரடங்கு உத்தரவு செயலால் ஆதரவற்றவர்கள் இந்த ஹலோ சீனியர்ஸ் திட்ட தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தங்களுக்கு தேவையான உதவிகளை ஈரோடு போலீசாரிடம் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக அவர்களுக்கு  மருத்துவ வசதி தான் அதிகம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அளவு மாத்திரைகள் போன்ற எதிர்பார்ப்புகள் அவர்களிடம் இருக்கிறது. இப்படி போலீசாரை அழைத்து பேசிய பல முதியவர்களுக்கு போலீசாரே நேரில் சென்று என்ன மாத்திரை மருந்து என கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அந்த மருந்து மாத்திரைகளை வீட்டிலேயே சென்று கொடுத்து வருகிறார்கள். இது ஒருவகையில் அர்ப்பணிப்பான செயல் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள் ஈரோடு மாவட்ட காவல் துறையினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.