Skip to main content

அரசு விடுவித்ததை சங்கம் செய்தது! -தமிழகத்திற்கே முன்னுதாரணம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
erode district Journalists Association



கொடிய வாழ்வில் நிலையாக மாறிப் போயுள்ளது இந்த கரோனா வைரஸ் காலம், அடுத்து என்ன என்கிற மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியை எல்லா மட்டத்திலும் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் ஊடகத்தில் பணிபுரிவோர்கள் அதாவது செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. இப்போது பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு பத்திரிகையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் தமிழக அரசு ஒரு அறிவிப்பை கொடுத்து செயல்படுத்தியது. அது என்னவென்றால் இந்த கரோனா வைரஸ் காலத்தில், இந்த நெருக்கடி நேரத்தில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் 3000 ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. அரசின் அறிவிப்பு அரசு நிர்வாக அமைப்புப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் அங்கீகாரம் செய்த பத்திரிகையாளர்களுக்கும் மட்டும் 3000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கப்பெற்றது. 


பெரும்பாலும் மாவட்ட தலைநகரங்களில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை போய் சேர்ந்தது. இதில் மாவட்ட தலைநகரையடுத்துள்ள ஏரியா செய்தியாளர்கள், தாலுகா செய்தியாளர்கள் பலருக்கும் இந்த நிதி கிடைக்கவில்லை. காரணம் தாலுகா செய்தியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைமுறையில் இல்லை என அரசு நிர்வாக அமைப்பு அவர்களை விடுவித்தது. ஆனால் பத்திரிகை துறையில் பல ஆண்டு காலம் பணிபுரிந்து வருகிறார்கள் தாலுகா அளவில் உள்ள ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள். அவர்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்கப் பெறவில்லை. 

இதை கருத்தில் கொண்ட ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி மாவட்ட தலைநகர் மற்றும் தாலுகா அளவில் அரசு நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு, குறிப்பாக அரசு நிவாரண உதவி விடுபட்டவர்களுக்கு உதவ வேண்டுமென திட்டமிட்டு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டும் சங்கத்தின் நிதியிலிருந்து தலா ரூபாய் 2000 கொடுக்கலாம் என தீர்மானித்து. 

 

 


அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகளான தலைவர் ரமேஷ், செயலாளர் ஜீவா தங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் இச்சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாட்டின்படி, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை விடுபட்ட சுமார் 60 பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் அரசு நிவாரண உதவி கிடைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் வேண்டுகோள், ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கே முன்னுதாரணமாக ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில், விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு தலா ரூபாய் இரண்டாயிரம் கொடுத்து, அவர்களையும்  ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.