Skip to main content

"சென்னையில் ஒரு லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன" -மாநகராட்சி ஆணையர் பேட்டி 

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
chennai corporation commissioner

 

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசிய அவர், "மூன்று மாத காலமாக ஒருநாள் தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை சென்னை மாநகராட்சியில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 37 ஆயிரத்து 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியாக இருந்தது. இதில் இருந்து தற்போது வரை 55% என்ற அளவில் 19 ஆயிரத்து 686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமும் 11,000 மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கடந்த 70 நாட்களாக வீடு, வீடாக சென்று இருமல் காய்ச்சல், சளி அறிகுறி இருக்கிறதா என்று கேட்டு அறிந்தனர். தற்பொழுது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் 90% மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். எனவே தற்போது மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது எளிமையாக இருக்கும்.

சென்னை மாநகராட்சி முழுவதும் 450 முதல் 500 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த பனிரெண்டு ஊரடங்கு நாட்களை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தங்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ பணியாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

தற்பொழுது அனைத்து பணியாளர்களுக்கும் முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தெர்மல் பரிசோதனை கருவி வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று அனைவரையும் பரிசோதனை செய்வார்கள். 

ஏதேனும் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த சிகிச்சைகள் மாநகராட்சியின் மூலம் அளிக்கப்படும். கரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொற்று இல்லாத பட்சத்திலும் 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தபடுவார்கள். 

அறிகுறி இருந்தபோதிலும் மக்கள் தாமாக முன்வந்து மருத்துவ பணியாளர்களிடம் கூறுவதில்லை. இதன் காரணமாகவும் இறப்பு அதிகரிக்கிறது. முன்கூட்டியே அவர்கள் கூறும்போது அவர்களுக்கான சிகிச்சையை துரிதமாக மேற்கொள்ள முடியும். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதும் கட்டுப்படுத்தப்படும்.

மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மருத்துவ முகாமை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறைகள் அதற்கான எங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு முடியவில்லை மருத்துவ பரிசோதனை செய்ய முடியவில்லை என்கிறபோது இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். 

இதுவரை மாநகராட்சியில் ஒரு லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வரின் ஆணைக்கிணங்க நான்காயிரம் இளைஞர்களை கொண்டு ஒரு மிகப்பெரிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநகராட்சிகள் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை கண்காணிப்பார்கள். 

இதுவரை சென்னை மாநகராட்சியில் 299 பேர் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுள்ளனர். இவர்களை காவல்துறையின் மூலம் கண்டறிந்து தற்பொழுதுவரை 150 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு தொடர் நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகங்கள் போன்ற கல்லூரிகள் தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்றும்போது அங்குள்ள மாணவர்களின் உடமைகளை உரிய மாணவர்களிடம் ஒப்படைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தற்பொழுது மருத்துவ அவசரம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதுபோன்ற நடவடிக்கை மிக அத்தியாவசியமாக இருக்கிறது. 

தனியார் கட்டிடங்கள் ஆக இருந்தாலும், அரசு கட்டிடமாக இருந்தாலும் மாநகராட்சி, கட்டிடத்தை கரோனா தொற்று தனிமைபடுத்துவதற்கு தேவையான கட்டிடம் என அறிவிக்கும்போது அதனை மாநகராட்சியிடம் ஒப்படைத்தே ஆக வேண்டும்" என்றார் அதிரடியாக.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story

சென்னை மாநகராட்சிக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The High Court fined the Chennai Corporation

திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (27.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிகிறது. சாதாரண மக்களால் சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்றால் கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) ஆகியவற்றுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்ச ரூபாயும், தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த அபராத தொகையான ரூ. 37 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.