Skip to main content

'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது குறித்தும் செய்தியாளர்களிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ். இப்போது வரை 41 பேருக்கு கரோனா நோய் தாக்கியிருப்பதை உறுதி செய்திருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. சுகாதாரத்துறையினர் கணக்கெடுத்துள்ள பட்டியலில் 1 லட்சம் பேர் இடம் பிடித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்கிறார் பீலாராஜேஷ்.

 

 corona virus issue - beela rajesh press meet

 



இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசிய அவர், "தமிழக விமான நிலையத்தில் அனைவரையும் ஸ்க்ரீன் செய்தோம். யார், யாரை எல்லாம் ஸ்க்ரீன் செய்தோமோ அவர்களது பயண வரலாறு, அவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் என ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதேபோல, பேருந்து மற்றும் ரயில் மூலமாக தமிழகம் வந்தவர்களையும் அதேபோல ஸ்க்ரீன் செய்து லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. இப்படி எடுக்கப்பட்ட பட்டியலில் 1 லட்சம் பேர் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

அத்தனை பேரையும் தனிமைப்படுத்துவதுதான் சரியானது. அதன்படி 10 மாவட்டங்களில் 41 நோயாளிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், அந்த மாவட்டங்களில் நாளை முதல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவிருக்கிறோம். அந்த 10 மாவட்ட கலெக்டர்களுக்கும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 41 நபர்கள் இருக்கும் இடத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்தை கண்டைன்மெண்ட் மண்டலம் என அடையாளப்படுத்துவதுடன், மேலும் 3 கிலோ மீட்டர் தூரப் பகுதியை ‘பப்பர் ஜோன்‘ என குறிப்பிடப்படவிருக்கிறது. மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒவ்வொரு 50 வீடுகளுக்கும், ஒரு பணியாளர் நியமிக்கப்படுவர். குறிப்பிட்ட 50 வீடுகளையும் அவர் ஆய்வு செய்வார். அந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்டவைகள் இருக்கிறதா என சோதித்துப் பார்ப்பார்கள்.

நியமிக்கப்படும் பணியாளர்கள், மருத்துவர்கள் போலவே கண்காணிப்பாளர்கள். மேற்கண்ட சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் முகக்கவசம் கொடுக்கப்படும். பப்பர் ஜோன் என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருப்பின் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட சோதனைகள் செய்து பார்க்கப்பட்டு, அப்படி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன் மூலம் சமூக பரவல் தடுக்கப்படும்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.