Skip to main content

'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது குறித்தும் செய்தியாளர்களிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ். இப்போது வரை 41 பேருக்கு கரோனா நோய் தாக்கியிருப்பதை உறுதி செய்திருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. சுகாதாரத்துறையினர் கணக்கெடுத்துள்ள பட்டியலில் 1 லட்சம் பேர் இடம் பிடித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்கிறார் பீலாராஜேஷ்.

 

 corona virus issue - beela rajesh press meet

 



இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசிய அவர், "தமிழக விமான நிலையத்தில் அனைவரையும் ஸ்க்ரீன் செய்தோம். யார், யாரை எல்லாம் ஸ்க்ரீன் செய்தோமோ அவர்களது பயண வரலாறு, அவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் என ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதேபோல, பேருந்து மற்றும் ரயில் மூலமாக தமிழகம் வந்தவர்களையும் அதேபோல ஸ்க்ரீன் செய்து லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. இப்படி எடுக்கப்பட்ட பட்டியலில் 1 லட்சம் பேர் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

அத்தனை பேரையும் தனிமைப்படுத்துவதுதான் சரியானது. அதன்படி 10 மாவட்டங்களில் 41 நோயாளிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், அந்த மாவட்டங்களில் நாளை முதல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவிருக்கிறோம். அந்த 10 மாவட்ட கலெக்டர்களுக்கும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 41 நபர்கள் இருக்கும் இடத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்தை கண்டைன்மெண்ட் மண்டலம் என அடையாளப்படுத்துவதுடன், மேலும் 3 கிலோ மீட்டர் தூரப் பகுதியை ‘பப்பர் ஜோன்‘ என குறிப்பிடப்படவிருக்கிறது. மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒவ்வொரு 50 வீடுகளுக்கும், ஒரு பணியாளர் நியமிக்கப்படுவர். குறிப்பிட்ட 50 வீடுகளையும் அவர் ஆய்வு செய்வார். அந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்டவைகள் இருக்கிறதா என சோதித்துப் பார்ப்பார்கள்.

நியமிக்கப்படும் பணியாளர்கள், மருத்துவர்கள் போலவே கண்காணிப்பாளர்கள். மேற்கண்ட சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் முகக்கவசம் கொடுக்கப்படும். பப்பர் ஜோன் என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருப்பின் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட சோதனைகள் செய்து பார்க்கப்பட்டு, அப்படி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன் மூலம் சமூக பரவல் தடுக்கப்படும்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.