ADVERTISEMENT

"கரோனாவே போ!... போ!..." ஆடி, பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள்!

07:56 AM May 01, 2020 | rajavel

ADVERTISEMENT


அரியலூர் மாவட்டத்தில் "கரோனாவே போ!.. போ!..." எனக் குழந்தைகள் ஆடிப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டத்தின் திருமழப்பாடி கிராமத்தில் விரைவில் மக்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தனிமனித இடைவெளி கடைபிடித்து, ஆங்கிலத்தில் எழுதிய பதாகைகளில் கரோனாவே போ... போ... எனவும் மக்களை வதைக்க வேண்டாம் என்பதனைக் குறிக்கும் வகையில் நோ... நோ... கரோனா எனவும் மக்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காகப் பதாகைகளை வைத்துக் கொண்டு பாடியும் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


மேலும் கரோனா போக மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT