டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு திரும்பிய, மேல்விஷாரத்தைச் சேர்ந்த 38 மற்றும் 42வயதுடைய இருவர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 55 வயது மிக்க ஒருவர், பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 39 வயது மிக்க ஒருவர் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

Advertisment

 Corona virus infection increases  in Ranipet

இவர்களுக்குவாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்து சுகாதாரத் துறை சார்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கரோனா உறுதிசெய்யபட்டவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 2 ந்தேதிப்படி, 5 ஆக உயந்துள்ளது.

மாவட்டம் முழுவது 560 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்வியதர்ஷினி கூறியுள்ளார்.