Advertisment

தமிழகத்தில் 300 ஐ தொட்ட கரோனா பாதிப்பு! 

tn

தமிழகத்தில் பரவலாக குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து சற்று அதிகரித்து பதிவாகி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 300-ஐ தாண்டியுள்ளது பாதிப்பு எண்ணிக்கை.

Advertisment

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 255 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 332 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,453 இருந்து 1,632 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 153 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 171 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 127 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-66 பேருக்கும், கோவை 23, திருவள்ளூர் 16, கன்னியாகுமரி 10 என கரோனா பதிவாகியுள்ளது.

Advertisment

health Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe