Skip to main content

மக்களின் தேவைக்கேற்ப உணவு பொருட்கள் உள்ளதா? ஈரோடு எஸ்.பி.ஆய்வு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நானே வல்லரசு என்று மார்தட்டிய அமெரிக்கா முதல், முன்பு இந்தியாவை தனது காலனி ஆதிக்கத்தில் அடிமைப்படுத்திய இங்கிலாந்து வரை தனது கோர முகத்தை காட்டி உயிர்களை பறித்து வருகிறது கரோனா.

 

 corona virus - food products issue - Erode sp  inspection  corona virus - food products issue - Erode sp  inspection



இதில் இந்தியா மிகப்பெரிய எச்சரிக்கையுடன் தனது அனைத்து நகர்வுகளையும் நடத்திவருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தாக்கம் சமூக பரவலாக தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் அது நிகழவில்லை. அதற்கு காரணம் மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் இதில் தீவிரமான கவனம் செலுத்தி வந்ததுதான். குறிப்பாக தமிழகத்தில் இதன் தாக்கம் தொடங்கியவுடன் மாநில அரசும், அரசுத்துறை அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடன் இதை எதிர் கொண்டார்கள். 

ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் இந்த வைரஸ் தொற்றை எதிர்த்து ஒரு போராக நடத்திவருகிறது. ஆகவேதான் தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் கூடினாலும் பாதிப்பில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு இந்த வைரஸ் தொற்று வந்ததற்கான காரணம் வெளி மாநிலம் சென்று வந்தவர்களும், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்களும்தான்.  இதை மாவட்ட நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்ததால் அதற்குத் தேவையான எச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து பணியாற்றியது.
 

nakkheeran app



இந்த வைரஸ் தொற்று மக்களிடம் பரவாமல் இருக்க அதற்குத் தேவையான நடவடிக்கைகளை இரு துறைகளும் செய்து வந்தன. இதன் காரணமாகவே தொடக்கத்தில் வந்த எண்ணிக்கையைப் போல் தற்போதும் அது கூடாமல் குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் 32 பேர் என்ற அளவிலேயே தற்போதும் நீடித்து வருகிறது. இதில் பலபேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் சிலர் குணமான நிலையிலும் மருத்துவமனையில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு உள்ளது. இதற்கிடையில் ஈரோடு மாவட்ட மக்கள் உணவுப் பொருள்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்குவதற்கு இந்த மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளதா என சோதித்துப் பார்ப்பதற்காக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், இன்று ஈரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் மொத்த வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வு நடவடிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீடித்தால், மக்களின் தேவைகளுக்கு உணவுப் பொருட்கள் இங்கு இருப்பு உள்ளதா, இல்லை வேறு பகுதியிலிருந்து வரவழைக்க வேண்டுமா என்பதற்கான ஆய்வுதான் இது என்கிறார்கள் அதிகாரிகள். மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதையே அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள் என்று அரசு பணியாளர்கள் கூறுகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.