Skip to main content

போஸ் கொடுக்க வந்த எம்.எல்.ஏ.க்கள்... சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லையே...

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

‘கத்தியின்றி ரத்தமின்றி’ இப்போது உலகம் முழுக்க நடக்கும் யுத்தம்தான் கரோனா வைரஸ் தொற்று. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நாட்டு பட்ஜெட்டில் போர் கருவிகள் வாங்க, ராணுவ தளவாடங்கள் புதிது புதிதாய் இறக்குமதி செய்வதற்கு பல லட்சம் கோடிகளை, இந்தியா போன்றுள்ள ஒவ்வொரு நாடும் ஒதுக்குகிறது. 
 

ஆனால் ஏவுகண, ராக்கெட், போர் விமானம் போன்ற் ஆயுதங்களை அமெரிக்காவும், சீனாவும் ஏற்றுமதி செய்கிறது. இப்போது பாருங்கள் கண்ணுக்கு தெரியாத வைரஸ் யாரையும் விட்டு வைக்கவில்லை. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என எல்லோரும் வீட்டிலேயே இருங்க, தனித்திருங்க என்று பிரச்சாரம் செய்கிறார்கள். 
 

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுடன் வீடியோ கான்ஃபெரன்ஸில் அவரவர் பகுதியிலுள்ள மக்களுக்கு உதவ வேண்டும், களத்தில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
 

 Erode - admk mlas


 

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் முகமும் இப்போது தொகுதிகளில் தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.வி. ராமலிங்கம் ஆகியோர் இன்று ஈரோட்டில் தற்காலிக காய்கறி சந்தையாக செயல்படும் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்வது போல் மக்களிடம் தங்களது முகங்களை காட்டி விட்டுச் சென்றனர்.
 

எம்.எல்.ஏ.க்கள் இருவரும் முகக் கவசம் அணிந்து தங்களது கட்சியினருடன் கூட்டமாக வந்து சென்றது போலீசாரை முகம் சுளிக்க வைத்தது. மக்களுக்கு சமூக இடைவெளியைப் பற்றி கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமாக வந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்தது சங்கடமாகத்தான் இருந்தது என கூறினார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

'கொங்கு சீமையின் கொள்கை வேங்கையை இழந்துவிட்டேன்' - வைகோ இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

'I have lost my  Kongu policy friend'-Vaiko's obituary

மதிமுக எம்.பி.யின் மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ‘அன்பு சகோதரரை இழந்துவிட்டேன். அன்புச் சகோதரர், கொங்கு சீமையின் கொள்கை காவலர் கணேசமூர்த்தியை இழந்துவிட்டேன். கொங்கு சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கணேசமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.