Skip to main content

ஊரடங்கை கடைப்பிடிப்பதில் முன்னுதாரணமாக திகழும் இலங்கை அகதிகள் முகாம்!

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 144 தடையுத்தரவு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் பெருவது தடை பட்டுவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் சில ஏற்பாடுகளை செய்து வீட்டை விட்டு வெளியே யாரும் வரக்கூடாது என அறிவிறுத்தியுள்ளது மத்திய – மாநில அரசுகள். அதனையும் மீறி 10 சதவித மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஊர் சுற்றிக்கொண்டு உள்ளனர்.

 

corona virus curfew - Sri Lankan refugee camp

 



இதற்கிடையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மக்களை பார்த்து ஆச்சயப்பட்டு போகிறார்கள் அப்பகுதி மக்கள். திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் இலங்கை அகதிகள் முகாம் சாலையோரமே உள்ளது. பாழடைந்த வீடுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன. வைரஸ் பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததும் இலங்கை அகதிகள் முகாம்மை சேர்ந்தவர்கள், தங்களது வீடுகளில் வீட்டுக்கு ஒரு பாலிஸ்டர் புடவையை வாங்கி அதை இணைத்து 300 மீட்டர் தூரத்துக்கு தங்களது குடியிருப்பை வெளியார் பார்வையில் இருந்து மறைத்துள்ளனர்.`

உள்ளேயுள்ள குடியிருப்பில் இருந்து வெளியே வரவும், வெளியில் இருந்து உள்ளே வரவும் ஒரு வழியை மட்டும் வைத்துள்ளனர். அந்த வழியையும் அடைத்து வைத்துள்ளனர். அனுமதியில்லாமல் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லாதபடி கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அந்த நுழைவாயிலில் இது 144 மற்றும் ஊரடங்கு உத்தரவால் இந்த ஏற்பாடு என நோட்டீஸ் ஒட்டிவைத்துள்ளனர்.

இதுக்குறித்து விசாரித்தபோது, இலங்கையில் இதுப்போல் பல ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை பார்த்தவர்கள் நாங்கள். பல நோய்களுக்கு நாங்கள் ஆட்பட்டவர்கள். பிறரிடம் இருந்து நாங்கள் அங்கே விலகியிருக்க இந்த வழியைத்தான் பயன்படுத்துவோம். அதையே தான் இங்கும் செயல்படுத்தியுள்ளோம் என்கிறார்கள்.


இவர்கள் இந்தியாவுக்கு அகதியாக இங்கு வந்து பல ஆண்டுகளை கடந்துவிட்டாலும் பாதுகாப்பு என வரும்போது தன் நாட்டில் இருந்ததை மறக்காமல் இங்கே சுய பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.

படஙகள் - எம்.ஆர்.விவேகானந்தன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.