கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டுக்குக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு காய்கறி சந்தை, பிற காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இன்று சென்னை எம்.ஆர். நகர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையாக நின்றனர். கூட்ட நெரிசல் இல்லாமல் வியாபாரம் நடக்கிறதா எனப் போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.