Skip to main content

செல்போனை தாக்கிய கொரோனா வைரஸ்!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

உலக அளவில் கடுமையான அச்சத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது கொரோனா வைரஸ். சீனாவில் உருவான இந்த உயிர்க்கொல்லி வைரஸ் உலகம் முழுவதிலும் 40 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.

இந்த நோயால் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நோயின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் சீனாவுடனான வர்த்தக தொடர்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

 

 Corona virus attacking cell phone


அதேபோல் இந்தியாவும் தன்னுடைய வர்த்தக தொடர்பை நிறுத்தி வைத்துள்ளது. அந்த வகையில், இந்தியா முழுவதும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்தையில் சீனாவின் செல்போன்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பு இருந்து வந்த நிலையில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் சீனாவை சேர்ந்த செல்போன்களை வாங்குகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் இருந்து செல்போன்கள் எதுவும் வராததால் இந்திய சந்தையில் உள்ள புதிய மாடல் செல்போன்கள் அனைத்தும் ஆயிரம் முதல் 5000 வரை விலை உயர்ந்துள்ளது. மேலும், கையிருப்பு தீர்ந்தால் செல்போன்களை எவ்வாறு பெறுவதென்று தெரியாமல் வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

POCO செல்போன்கள், ஒரு மாதத்திற்கு மட்டுமே இருப்பில் உள்ளன. இதேபோல் சியோமி, ஹூவேய், விவோ ஆகிய பிராண்டுகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.

இந்தியாவுக்கு செல்போன்கள் இறக்குமதி செய்வது 50 சதவீதம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால், சீனாவில் ஐபோன்களின் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மிகக்குறைந்த நேரமே ஆப்பிள் ஷோரூம்கள் திறக்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனம், 4-ம் காலாண்டு வருவாய் 4,82,000 கோடி ரூபாய் என்று இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இதில் 15 சதவிதம், அதாவது சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் சீனாவில் இருந்து கிடைக்கும் வருவாய். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபோன் விற்பனை குறைந்து, ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் சாம்சங் நிறுவனம், தனது உதிரி பாகங்களை, கப்பல் மற்றும் விமானம் மூலம் வியட்னாமிற்கு அனுப்பி அங்கு உள்ள தொழிற்சாலைகளில் செல்போன் உற்பத்தியை அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டில் சாம்சங் மூலம் வியட்நாமிற்கு 4,17,00,000 ரூபாய் வருவாய் கிடைத்தது.

ஆப்பிள் போன்களின் விற்பனை குறையத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில், சாம்சங் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. வியட்னாமில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கு குறைந்த வட்டியிலோ அல்லது வட்டியே இல்லாமலோ கடன் வழங்கத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக சாம்சங் தரப்பில், 15,500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இருப்பினும் சீனாவில் தயாரிக்கப்படும் GALAXY S20 SERIES உள்ளிட்ட சில ரக போன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

ஜியோமி நிறுவனமும் கொரோனா வைரஸ் பிரச்சனையால், செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தியை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஜியோமி போன்களின் விலையும் அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த மாதம் முதல் சீனா கம்பெனிகளின் ஷோரூம்களை இந்தியாவில் வைத்துள்ளவர்கள். நஷ்டத்தில் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்ப  தொடங்கி உள்ளனர். மேலும், செல்போன்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்பவர்களும் தற்போது புலம்பு தொடங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.