Skip to main content

கரோனாவுக்கு எதிராக வீட்டின் முகப்பு முன்பு விளக்கு ஏற்றிய ஓ.பி.எஸ்.! கரோனா... கரோனா... குரல் கொடுத்த மக்கள்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

கரோனாவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் வகையில், பிரதமர் மோடி ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளின் முன் விளக்கு ஏற்றவும், மாடிகளில் டார்ச் லைட் வெளிச்சத்தை காட்டுங்கள் என்றும் கூறியிருந்தார். 


  corona virus


 

அதைத்தொடர்ந்துதான் இந்தியா முழுவதும் மக்கள் விளக்கு ஏற்றினர். அதேபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் பிரதமர் மோடியின் வேண்டுகோளை கடைபிடித்து விளக்கு ஏற்றினர். அது போல் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியிருப்பதால் தனது வீட்டின் முகப்பு முன்பு விளக்கு ஏற்றினார். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் மெழுகுவர்த்தி மூலம் தீபம் காட்டினார்கள்.

 

corona virus


அதுபோல்  தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய  சட்டமன்ற தொகுதிகளிலும் நகரம் முதல் பட்டித் தொட்டிகள் வரை இருக்கக்கூடிய மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பு விளக்கு ஏற்றியும், மாடிகளில் செல்போன் மூலம் டார்ச் அடித்தும் கரோனா, கரோனா என குரல் கொடுத்தனர்.
 

nakkheeran app



 

corona virus


 

இதேபோல் அந்தந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார்கூட மெழுகுவர்த்தி மூலம் தீபம் காட்டினார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள  திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் ஆங்காங்கே தங்கள் வீடுகளுக்குமுன் வாசலிலும், வாசல்படிகளிலும் கார்த்திகை தீபம்போல் விளக்கு ஏற்றினர், பலர் வீடுகளின் மொட்டை மாடியில் குடும்பத்தோடு நின்று செல்லில் லைட் அடித்தும், மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி தீப ஒளி காட்டினர். அதுமட்டுமல்லாமல் தங்கள் வீடுகளில் உள்ள  சிறு குழந்தைகள் முதல் இளைய சமுதாயம் வரையும்கூட வீட்டுக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தியும், செல் லைட் மூலம்  ஒளிவட்டம் போட்டும் கரோனாவை விரட்டுவது போல் குரல்  கொடுத்து, தங்கள் மனதின் உணர்வுகளையும் வெளிப்படுத்தி காட்டினர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

“பிரதமர் மோடி எனக்காக விட்டுக் கொடுத்தார்” - உண்மையை உடைத்த ஓபிஎஸ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
OPS said that Prime Minister Modi has given up his constituency for me

பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை தமிழ்நாட்டில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனை உண்மை தான் என்பது போல ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனையறிந்த அதிமுகவினர் மேலும் ஒ.பன்னீர்செல்வங்களை சுயேட்சை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அறந்தாங்கி நகரில் அண்ணாசிலை அருகே பேசும் போது, நான் போட்டியிடுவதாக சொன்னதும் எங்கிருந்தோ ஒ.பன்னீர்செல்வங்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் எல்லாம் "ஒ.பன்னீர்செல்வம் இல்லை, நான் மட்டும் தான் ஓ.பன்னீர்செல்வம்". முதலமைச்சர், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவன் நான். புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி பறிபோனதும் அம்மா என்னை அழைத்து தொகுதியை மீட்க உண்ணாவிரதம் இருக்கச் சொன்னார். ஆனால், இந்த முறை பிரதமரிடம் நேரடியாகச் சொல்லி மீட்டுத்தருவேன். இந்த ராமநாதபுரம் தொகுதி பிரதமர் மோடி நிற்க வேண்டிய தொகுதி அவர் என்னை போட்டியிட அனுப்பி வைத்திருக்கிறார். எனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் என்றார்.