கரோனா பாதிப்பு: அரசிடம் நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்!

இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Corona Virus - actor kamal hassan Request

இந்நிலையில் கரோனா தடுப்பால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இழப்பீடு தொகையை அமைப்புசாரா தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

corona virus tn govt
இதையும் படியுங்கள்
Subscribe