Skip to main content

கரோனா கொடுமை கண்டு மனம் வருந்திய  9ம்வகுப்பு மாணவி செய்த செயல்! 

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
g

 

கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பொது அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனால்,  பல்வேறு கிராமங்களில், பொது இடங்களில் இந்த விழிப்புணர்வை பொதுமக்களில் பலரும் பின்பற்றுவதில்லை.  இதை கண்டு மனம் வருந்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் செயலை அனைவரும் பாராட்டுகின்றனர்.

 

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ளது புதுப்பாளையம் கிராமம். இந்த  கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி.  இவர் அவரது ஊரில் பொதுமக்கள் கரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள்  அறிவித்த சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றாமல் தெருக்களில் பொது இடங்களில் நடப்பதும், கும்பல் கும்பலாக கூடுவதும் தெருக்களில் நடப்பதும் ஆக  இருந்துள்ளனர்.

இதைநேரில்  பார்த்த மாணவி ஷாலினிக்கு மன வேதனையாக இருந்தது. இந்த மனிதர்களிடம் நாம் நேரடியாக ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும். இப்படி கும்பலாக கூடக் கூடாது, நடந்து செல்லக் கூடாது என அறிவுரை சொன்னால் அவர்கள் நீ என்ன சின்ன பிள்ளை உனக்கு என்ன தெரியும் என்று நம்மை கடிந்து கொள்வார்கள் என்பதை உணர்ந்தார்.

அதே நேரத்தில் இந்த சமூக மக்களுக்கு நம்மால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  அதற்கு  நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் அவரிடம் ஏற்பட்டது. உடனே அவர் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளில் படிப்பு சம்பந்தமாக பயன்படுத்தும் சார்ட் அட்டைகளை வாங்கிவந்து அவைகளில் கொரானாநோய் மிகவும் கொடூரமானது அதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,  அதற்காக நாம் தனித்துத் இருப்போம் என்பது போன்ற வாசகங்களை எழுதி,  எழுதி ஊரில் மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் மக்கள் பார்வையில் படும் விதமாக ஆங்காங்கே ஒட்டி வைத்துள்ளார்.  இதை படித்த சிலர் ஒரு பள்ளி மாணவிக்கு நம்மீது  இருக்கும் அக்கறை நமக்கும் இருக்க வேண்டும் என்று அந்த மாணவியை பாராட்டியுள்ளனர். 

மாணவியை பாராட்டினால் மட்டும் போதாது, மாணவியின் வாசகத்தை  ஊர் மக்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்கிறார்கள் அவ்வூரில் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

டெல்லியில் விவசாயி கொலை; அரியலூரில் பதட்டம்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Hariyana farmer passes away tens in Ariyalur

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசுடன் நடத்திய நான்கு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் நேற்று பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். குறிப்பாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதியான கனாரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 வயதான விவசாயி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நேற்றைய தினம் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி ஆகிய இருவரும், விவசாயி  கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Hariyana farmer passes away tens in Ariyalur

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமானூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கோசலராமன், அரியலூர் தாசில்தார் ஆனந்தவேல் ஆகியோர், இரு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக தரும்படி தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு வழியாக மூன்று மணி நேரம் போராடிய விவசாயிகளை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கீழே இறக்கினர்.

அதன்பிறகு விவசாயிகள், டெல்லியில் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிக்கு ஒரு கோடி இழப்பீடு தர வேண்டும். துப்பாக்கிச் சூட்டினை நிறுத்த வேண்டும். கண்ணீர் புகை குண்டு வீசுவதனை உடனடியாக நிறுத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திட உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி அளித்தபடி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகளின் பிள்ளைகளின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அறவழியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரவாதிகளின் போராட்டத்தைப் போன்று கொச்சைப்படுத்துதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். 

இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூறினர். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு முதலுதவி செய்து, பழச்சாறு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டனர். இந்த மொத்த நிகழ்வும் முடியும் வரை அரியலூர் தாசில்தார் உடனிருந்தார். இரு விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.