Skip to main content

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா வைரஸ் ஆய்வுக்கூடம்

Published on 28/03/2020 | Edited on 28/03/2020
a


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி சார்பில் கொரானா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனை, பெட்ரோல் பங்க், மெடிக்கல், வங்கிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த பணிகளை   மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். பின்னர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் கூறுகையில் விரைவில் கொரானா வைரஸ் ஆய்வுக் கூடம்  ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்படுகிறது.

 

இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெறுகிறது.  ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி ஒரு வாரம் நடைபெறும் பின்னர் ஊழியர்களுக்குப் பயிற்சி முடிந்தவுடன் வைரஸ் ஆய்வு தொடங்கபடும். 

 

ஊரடங்கு உத்தரவில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுகிறது.  ஊரடங்கு உத்தரவையொட்டி சில அத்தியாவசிய கடைகள் திறந்துள்ளது. இதில் வணிகர்கள் அதிக விலைக்கே அத்தியாவசியப் பொருட்கள் விற்பதாகத் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. அவர்களைக் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  எனவே வணிகர்கள் மனிதநேயத்துடன் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 

a

 

இதனைத்தொடர்ந்து அம்மா உணவகத்தில் உணவுகளை ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். அப்போது உணவகத்திற்கு வந்த பொதுமக்களிடம் நன்கு கைகளைக் கழுவ வேண்டும் என்றும் அம்மா உணவகம் ஊரடங்கு உத்தரவு உள்ள வரை அனைவருக்கும் இலவச உணவு கொடுக்கும். இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பொதுமக்களிடம் கூறினார்.

 

மேலும் பொதுமக்களுக்கு உணவு இல்லை, வாகன வசதி உள்ளிட்ட எந்த ஒரு குறையாக இருந்தாலும் 1077 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.

 

பின்னர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் இடைவெளி விட்டு வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தூரத்தில் நின்று பொருட்களை வாங்க வேண்டும் என்றும், ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் தேவையில்லாமல் சாலையில் சுற்றுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். மேலும் பொதுமக்களும் அதிகம் வெளியில் வருவதைத் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் மகாதேவன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.