Skip to main content

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் - பூஸ்டர் டோஸ் செலுத்துக்கொள்ள அறிவுறுத்தல்

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

corona Vaccination Camp in Tamil Nadu today

 

தமிழகத்தில் இன்று கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.

 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

இந்த முகாமில், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸும் செலுத்தப்படுகிறது.பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 31- வது கரோனா தடுப்பூசி முகாம் துவங்கியது!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

The 31st corona vaccination camp has started in Tamil Nadu!

 

தமிழகம் முழுவதும் இன்று (10/07/2022) ஒரு லட்சம் இடங்களில் 31-வது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

 

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிப் போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 45 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் இரண்டாவது தவணை செலுத்தாதவர்கள், ஆறு மாத கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என மாநிலத்தில் 1 கோடியே 45 லட்சம் பேர் உள்ளனர். 

 

அவர்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 78 லட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 


 

Next Story

சேலம்: ஏப். 30ல் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம்! 1,392 மையங்களில் நடக்கிறது!! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

coronavirus vaccination camp in salem district collector announcement

 

சேலம் மாவட்டத்தில் ஏப். 30- ஆம் தேதி, 1,392 மையங்களில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28- வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 27) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. 

 

அவர் கூறியதாவது, "கோவிட் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் ஏப். 30- ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 

 

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், வாக்குச்சாவடி மையங்கள் உள்பட மொத்தம் 1,392 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழச் செய்ய வேண்டும். அதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். 

 

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 91.3 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 70.9 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 7.4 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் உள்பட 15 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு இந்த மாபெரும் முகாம் நடத்தப்படுகிறது. 

 

மாவட்ட மற்றும் ஊராட்சிகள் அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடன் வீடு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோவிட் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றுதான் பாதுகாப்பான வழிமுறை ஆகும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறினார். 

 

மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா, மேட்டூர் உதவி ஆட்சியர் வீர் பிரதாப் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் செல்வம், நலப்பணிகள் துறை இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குநர்கள் நளினி, ஜெமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.