உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகிரித்து வருகின்றது. குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகின்றது. விருதுநகர், மதுரை மாவட்டங்களில் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தேனி மாவட்டத்தில் மேலும் 170 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,069 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவர் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.