Skip to main content

தமிழ்நாட்டில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு!

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

jkl

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 4.519 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 4956 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 792 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 921 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,809 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

தற்பொழுது வரை 90,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 20,237 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 32,35,118 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று மட்டும் 1,15,898 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்