Skip to main content

மின்னல் வேகத்தில் கரோனா.... தமிழகத்தில் ஒரே நாளில் 1000க்கும் மேல் அதிகரித்த தொற்று!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

்பு

 

தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் இன்று 2,731 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1489 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் தொடர்ந்து 1000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 27,55,587 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 674 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,06,696 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,805 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,03,798 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 5,78,53,206 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 12,412 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை சீராக உயர்ந்து வந்த நிலையில் இன்று அதீதீவிரமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று பதிவான பாதிப்பை விட இன்று ஒரே நாளில் 1003 பேருக்கு கூடுதலாக தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்