Advertisment

தலைநகரைப் போலவே மாவட்டங்களிலும் வேகமெடுக்கும் கரோனா... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்!

jh

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக உள்ளது.

குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாத 161 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்துள்ளது. அதைப்போல் வேலூர் மாவட்டத்திலும் இன்றும் புதிதாக 209 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,131 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று புதிதாக 162 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையைப் போன்றே பிற மாவட்டங்களிலும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe