Advertisment

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 284 பேருக்கு கரோனா!

ரபக

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத்தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை அதிக பாதிப்புக்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. சமீப நாட்களாக மதுரையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 400க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் அங்கு பதிவாகி இருந்தது. இந்நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வருகிறது. நேற்று மட்டும் 191 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று இதுவரை 284 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,306 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe