Advertisment

பாதிப்பு 1,404; டிஸ்சார்ஜ் 1,411 - கரோனா இன்றைய அப்டேட்!

j

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 380 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.சென்னையில் 40 நாட்களாக தொடர்ந்து 1,000 -க்கும் குறைவாகக் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. ஆனால், பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 7,83,319 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உள்ளது. இதன்மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,60,617 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,722 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 65,058 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 1,21,25,059 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe