Advertisment

திருவள்ளூரில் ஒரே நாளில் 475 பேருக்குக் கரோனா தொற்று!

f

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் குறிப்பாக மராட்டியத்தில் கரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தென் இந்தியாவைப்பொறுத்த வரையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் தீவிரமாக இருந்த பாதிப்பு தற்போது தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 475 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,048 ஆக அதிகரிப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe