Skip to main content

இந்தியாவில் 3 ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை!    

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
CORONA UPDATE IN INIDA

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் கரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 


இந்நிலையில் தற்போது இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 90,927 என்ற அளவிலும், கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,109 என்ற அளவிலும் உள்ளது. அதேபோல் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,752 என்ற அளவிலிருந்து 2,872 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கரோனா இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 7000க்கும் மேற்பட்டோர் பேர் குணமடைந்த நிலையில், 1,135 பேர் மகாராஷ்டிராவில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்