Advertisment

கரோனா குணமாகி இன்று மட்டும் 4,545 பேர் வீடு திரும்பினர்... 3,616 பேருக்கு புதிதாக பாதிப்பு!

vb

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரைஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் நேற்று மட்டும்3,827 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 3,616 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,594ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,203 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 4,545 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்தமாக 71,116 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,575 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe