Skip to main content

சென்னை அல்லாத மாவட்டங்களில் மும்மடங்காக உயர்ந்ததா கரோனா?!!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
 Corona in triple effect in non-Chennai districts

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கரோனா உறுதியானதால், வேலூரில் மொத்த பாதிப்பு என்பது 888 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மேலும் 55 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை அங்கு 422 ஆக உயர்ந்துள்ளது. இதில் கரோனா இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் தற்போது மேலும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா பாதிப்பு மும்மடங்காக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்