Skip to main content

கரோனா சிகிச்சை -தி.மலை தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

corona

 

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, பழைய மருத்துமவனை, வந்தவாசி, ஆரணி அரசு மருத்துவமனை, செய்யார் பாலிடெக்னிக், ஆரணி அண்ணா பல்கலைழக பொறியியல் கல்லூரி, ரங்கமால் தனியார் மருத்துவமனை, எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக் என சில இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மருத்துவ சிகிச்சை அளிக்கிறது.

 

தனியார் மருத்துவமனை ஒன்று மருத்துவமனையின் ஒரு பகுதியை (சுமார் 80 பெட்கள் கொண்ட அரங்கம்) மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

 

அந்த மருத்துவமனையின் மற்ற பகுதிகள் தனியாகக் கரோனா நோயாளிகளுக்கு கட்டண சிகிச்சை அளிக்கும் மையமாக இருக்கிறது. இந்தத் தனியார் மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பப்படும் கரோனா நோயாளிகளிடம், எங்கள் மருத்துவமனையில் தனியாக சிகிச்சை அளிக்கிறோம், இங்கே சேர்ந்தீர்கள் என்றால், சிறப்பான சிகிச்சை அளிக்கிறோம் என மருத்துவமனை நிர்வாகம் பேசுவதாகக் கூறப்படுகிறது. தினசரி 3 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 8 ஆயிரம் ரூபாய் பேக்கேஜ் என்கிற பெயரில் ரூம்கள் ஒதுக்கப்பட்டு அங்கு கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். வசதியானவர்கள், பிரபலமானவர்கள் அங்கே சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.


மருத்துவமனையில் சேர்ந்த பின்பு எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்கிற குரல்கள் வெளியாகின்றன. இதுப்பற்றி நம்மிடம் பேசியவர்கள், கரோனா தடுப்புப் பணியில் நண்பர் பணியாற்றுகிறார். அவரது மனைவி, மகளுக்கு கரோனா என உறுதியாகி திருவண்ணாமலை நகரத்தில் இருந்து மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் செயல்படும் இலவச மருத்துவ முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். 108 ஆலம்புலன்ஸ் விட்டு கீழே இறங்கியதுமே அந்த மருத்துவமனை நிர்வாகி, எங்களிடம் சிறந்த சிகிச்சை கிடைக்கும், தனி ரூம், டாய்லட் வசதி நன்றாக இருக்கும், நல்ல உணவு தருகிறோம் எனப் பேசி தினசரி 5 ஆயிரம் ரூபாய் விலையில் ரூம் ஒதுக்கி அட்மிட் செய்தார்.

 

10 நாள் சிகிச்சைக்கு பின்பு, அம்மா, மகள் இருவருக்கும் ஒரேநாளில் ஒரேநேரத்தில் ஸ்வாப் டெஸ்ட் எடுத்தார்கள். அம்மாவுக்கு மறுநாள் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. அவர்களது 8 வயது மகளுக்கு ரிசல்ட் வரவில்லை. மகளுக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டபோது, எங்களுக்குத் தெரியாது என்றார்களாம். 8 வயது மகளை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வெளியே போவது எனத் தாயார் கேட்டபோது, ரிசல்ட் வரும் வரை நீங்களும் இருங்க, ஆனா அதுக்குப் பணம் கட்டவேண்டும் எனச் சொல்லியுள்ளார்கள். 3 நாட்களுக்குப் பிறகு ரிசல்ட் வர, 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக பணம் வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் செய்துள்ளார்கள்.


ஒரேநாளில், ஒரேநேரத்தில் அம்மா, மகளுக்கு டெஸ்ட் எடுக்க, அது எப்படி ஒருவருக்கு மட்டும் ரிசல்ட் வரும்? திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகத்துக்கு அனுமதி கிடையாது, அரசு ஆய்வகங்கள் தான் அதற்கான உரிமையைப் பெற்றுள்ளன. இவர்களும் அரசு ஆய்வகத்தில் தான் டெஸ்ட் செய்தார்கள். அம்மா, மகள் இருவருக்கும் டெஸ்ட் ரிசல்ட் வர எப்படித் தாமதமாகும்? வந்த ரிசல்ட்டை வெளிப்படுத்தாமல் பணம் வசூலிக்க திட்டமிட்டு இப்படிச் செய்தார்களா எனக் கேள்வி எழுப்பினார்.


திருவண்ணாமலை நகரின் முக்கிய அமைப்பு ஒன்றின் பிரமுகர் கரோனா பாதிப்பால் சில தினங்களுக்கு முன்பு இறந்தார். அவரது மனைவி தற்போது அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்துள்ளார். என்னிடம் பணம்மில்லை இன்சூரன்ஸ் க்ளைம் செய்துக்கொள்ளுங்கள் எனச் சொன்னபோது, முடியாது, பணத்தை நீங்க கட்ட வேண்டும் எனக் கெடுபிடி செய்துள்ளார். மருத்துவமனையில் நாம் உள்ள நிலையில் இதுப்பற்றி வெளியே சொன்னால் பிரச்சனையாகிவிடுமோ என தவிக்கிறார்கள் அந்தக் குடும்பத்தார்.


ஒரு தொண்டு நிறுவனத்தின் குடும்பத்தார் அதே தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட, அவர்களிடமும் பண வசூல் வேட்டை நடத்தியதாக அந்தத் தொண்டு நிறுவன நிர்வாகி மனம் குமைந்துகொண்டுள்ளார்.

 

http://onelink.to/nknapp


இப்படித் தொடர்ச்சியாக அந்தத் தனியார் மருத்துவமனை மீது புகார்கள் அதிகரிக்கின்றன. மாவட்ட நிர்வாகம், அரசின் கரோனா சிகிச்சை மையம் என அங்கே அனுப்பிவைக்கிறது. அப்படி வருபவர்களிடம், எங்களிடம் வாங்க சிறப்பான சிகிச்சை எனச் சொல்லி அட்மிட் செய்து, பயத்தை மூலதனமாக்கி ஏமாற்றி கொள்ளையடிக்கிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.


திருச்சியில் கரோனா டெஸ்ட் ரிசல்ட்டில் குளறுபடி செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்ததும், பிரபலமான ஆய்வகத்தை மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்துள்ளது. சென்னையில் சில தனியார் மருத்துமவனைகள் மீது அதிக கட்டணம் வசூலித்த குற்றச்சாட்டு வெளிப்படையாக வந்து விசாரணை நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.