ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,512 பேருக்கு கரோனா உறுதி!

08:49 PM Jun 29, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று 4,512 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 275 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 500க்கும் குறைவான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக இருந்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 24,75,190 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 6,013 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,03,349 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,60,423 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 3,26,75,628 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT