ADVERTISEMENT

திருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு! ஒரே நாளில் 407 பேருக்கு தொற்று!!

04:12 PM Aug 12, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களைப் பொறுத்தவரையில் கரோனா வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாகச் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், பிற மாவட்டங்களை விட கரோனா வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் திருவள்ளூரில் இன்று மட்டும் இதுவரை 407 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 18,113 ஆக அதிகரித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT