தேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று!

hjk

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகின்றது. மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கரோனா வேகம் அதிரடியாக இருந்து வருகின்றது. தேனி மாவட்டத்தில் கரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று மட்டும் 357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 8,000ஐ கடந்துள்ளது. இதுவரை 8,257 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,111 பேர் குணமடைந்துள்ளனர்.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe