Skip to main content

10 மணிநேர தொடர் விசாரணை... சிவசங்கர் பாபாவுக்கு கரோனா பரிசோதனை!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

Corona test for Sivashankar Baba after 10 hours of continuous interrogation!

 

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நள்ளிரவில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். 

 

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

 

சிவசங்கர் பாபா மீதான புகார்கள் குவிந்த நிலையில், இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. நேற்று (16.06.2021) டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நள்ளிரவே சென்னை அழைத்துவரப்பட்டார். 

 

எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 10 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலுக்காக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இறங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவை பாதுகாப்போடு எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிவசங்கர் பாபாவுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இந்த இரண்டு பரிசோதனைகளும் முடிந்த பிறகு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகள்களை மிரட்டி பாலியல் தொந்தரவு; தந்தையின் கொடூர செயல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

sexual harassment of daughters by Father's in covai

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

 

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார். 

 

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

 

Next Story

அமைச்சர் மீது பாலியல் புகார்; பெண் பயிற்சியாளர் இடைநீக்கம்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Sexual complaint against minister Suspension of female coach

 

ஹரியானா முன்னாள் அமைச்சர் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்குக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்த இளநிலை பெண் தடகள பயிற்சியாளரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாக இளநிலை பெண் பயிற்சியாளர் ஒருவர் புகார் செய்தார். அந்த புகாரில், சந்தீப் சிங் தன்னை ஜிம்மில் பார்த்ததாகவும், அதன் பின்னர் தன்னை பின் தொடர்ந்ததாகக் கூறினார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை சந்திக்கும்படி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு ஹாக்கி அணியின் முன்னாள் இந்திய கேப்டன் சந்தீப் சிங் மீது சண்டிகர் காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்த சந்தீப், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அதனால், தார்மீக அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்”  எனக் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், சந்தீப் சிங் மீது புகார் கூறிய இளநிலை தடகள பெண் பயிற்சியாளரை பணி இடைநீக்கம் செய்து ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 11 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவில் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான காரணம் கூறப்படவில்லை. அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

 

இது குறித்துப் பேசிய பெண் பயிற்சியாளர், “சில மாதங்களாக அரசின் உயர் அதிகாரிகள் எனக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். எத்தனை இடையூறுகள் வந்தாலும் விளையாட்டுத் துறை அமைச்சர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவேன். என்னை பணியில் இருந்து நீக்கினாலும் என்னுடைய உரிமைக்காக போராடுவேன். என் பணி இடைநீக்கம் நடவடிக்கையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் முறையிடுவேன்” என்று கூறினார்.