Advertisment

தமிழகத்தில் கரோனாவுக்கு முதல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி!

corona police

சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி (வயது47) கரானாவுக்கு பலியானது, சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கடந்த 5-ந் தேதி அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆய்வாளரின் 2 கார் ஓட்டுனர்கள், 2 காவலர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஐ.ஐ.டி வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே, பாலமுரளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் 8-ந் தேதி ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்பாட்டின்பேரில், ஐதராபாத்தில் இருந்து சிறப்பு மருந்து வரவழைக்கப்பட்டு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது.

அதன்பிறகு உடல்நிலை தேறி வந்த நிலையில், இன்று மாலை 5-00 மணியளவில் ஆய்வாளர் பாலமுரளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல் துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த முதல் நபர் பாலமுரளி ஆவார்.

Chennai corona virus Police Inspector t.nagar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe