Skip to main content

கரோனா பதிப்பு ஆய்வு - சி.ஏ.ஏ. கணக்கெடுப்பு என அதிகாரிகள் சுற்றிவளைப்பு...!!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

டில்லியில் நடைபெற்ற மத மாநாட்டிற்கு சென்று வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரை சேர்ந்த 8 பேர்களை தனிமைப்படுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மருத்துவர்கள். அதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 1ந்தேதி வாணியம்பாடி நகரின் அனைத்து பகுதிகளில் வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இரும்பல் இருப்பவர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது.

 

 Corona Survey - Officers Surrounded as CAA Survey


இப்பணிகளில் சுகாதாரத்துறை தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 150க்கும் மேற்பட்டோர் 75 குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதிமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கணக்கு எடுக்க வந்துள்ளதாக தவறான தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியான அப்பகுதி இஸ்லாமிய மக்கள் கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை சுற்றி வளைத்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை கணக்கெடுக்க வந்தவர்கள் நகர காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சுகாதார பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டு, பிரச்சனையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை பிடித்து ஜீப்பில் ஏற்றினர். இதனைப்பார்த்து தகராறு செய்த வேறு சிலர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடிவரும் அதேவேளையில் அழைத்து சென்றவர்களை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சனையால் அந்த பகுதியில் கணக்கெடுப்பு பணி 1 மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஏற்பட்டது. காவல்துறை வந்தபின் தற்போது தொடர்ச்சியாக அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.