Advertisment

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கரோனா!

ghj

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக்கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படுகிறது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகின்றது. இன்று மேலும் 271 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11,579 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 214 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 8,224 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe