தமிழகத்தில்பரவலாககுறைந்திருந்தகரோனாபாதிப்பானது சிலநாட்களாகசற்றுஅதிகரித்துபதிவாகி வருகிறது. இந்நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் 50 முதல் 100 படுக்கைகளைகோவிட்சிகிச்சைக்காகதயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் கடந்த 18 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களைதொலைபேசிமூலமாகதினசரி உடல்நிலைகுறித்துக்கேட்க வேண்டும், லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்குசிங்க்,பாராசிட்டமால்,வைட்டமின்சி மாத்திரைகள் வழங்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேலூரில்கரோனாபரவலைத் தடுக்க அம்மாவட்டத்தின் ஆட்சியர்குமாரவேல்பாண்டியன் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி, வேலூரில் பெரிய வணிக வளாக கடைகளில் ஏ.சிபயன்படுத்தத்தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள் நடக்கும்பொழுது திருமண மண்டபங்களில் 100 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.அதனை மாநகராட்சி ஊழியர்கள் உறுதி செய்யவேண்டும். துக்க நிகழ்ச்சிகளில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதி இல்லைஎனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.