சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணி தீவிரம் (படங்கள்)

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஆயிரத்தை தாண்டியே பதிவாகி கொண்டு வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வருகிற 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை தவிர கல்லூரிகள், பள்ளிகளில் படுக்கை வசதியுடன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Anna University Chennai corona ward
இதையும் படியுங்கள்
Subscribe