நாடு முழுவதும் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களானதூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள்ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு தற்பொழுது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லை என்றாலும் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.