Skip to main content

சென்னை துறைமுக பொறுப்புக் கழக தேர்தலின்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்! – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Corona rules must be followed during the Chennai Port Authority election! - High Court order!

 

துறைமுக பொறுப்புக் கழக நிர்வாகப் பிரதிநிதிகளாக,  தொழிற்சங்கத்தினரை தேர்வு செய்யும் தேர்தலின்போது, கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுமென,  சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் நிர்வாகத்தில்,  பிரதிநிதிகளாக தொழிற்சங்கத்தினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகள்,  அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என,    துறைமுக பொறுப்பு கழக தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். 

 

கரோனாவின் தாக்கம் குறையாமல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை,  குறைந்தபட்சம் 6 மாதம் தள்ளிவைக்க வேண்டுமென்று, பாரதிய துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான வி.செல்வராஜ் என்பவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அந்த வழக்கு,  நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது,  தேர்தலில் பங்கேற்க ஊழியர்கள் கூடும்போது,  கரோனா பரவும் அச்சம் இருப்பதாக,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சிலம்பரசன் வாதிட்டார். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் சென்னை துறைமுகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கும்படி  துறைமுக தலைவர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  தேர்தல் பணியில் பல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முலம் தேர்தல் தொடர்பான படிவங்கள் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டுள்ளன.  இதனால்,  பல ஊழியர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்படும்.  முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி முறையாக கண்காணிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்ததுடன் துறைமுக நிர்வாகத்தின் கடமை முடிந்துவிடவில்லை.  அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவதையும், வரிசையில் நிற்கும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதையும், கிருமிநாசினி வழங்குவதையும்,  துறைமுக நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.   தேர்தல் பிரச்சாரத்தை நேரடியாக நடத்தாமல், மின்னணு முறையிலேயே மேற்கொள்ள வேண்டுமென தொழிலாளர் சங்கங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.


மத்திய -  மாநில அரசுகள் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை,  அனைத்து வகையிலும் கடைபிடித்து, கரோனா தொற்று, ஒருவருக்கு கூட பரவ இடமளிக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, தேர்தல் காலத்திற்கு மட்டுமல்லாமல், வழக்கமான பணிக்காலத்திலும் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.