Skip to main content

காலணிகளை அடையாளம் போட்டு நிவாரண உதவிகள் வாங்கிய மக்கள்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

குடிதண்ணீர் பிடிப்பதற்காக பொதுமக்கள் முன்கூட்டியே வரிசை போடுவதற்கு டப்பா வாளியை போட்டு விட்டு அதன்பின் அந்த இடங்களில் வரிசையாக நின்று தண்ணீர் பிடிப்பது பார்த்திருக்கிறோம். அதுபோல் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் ஏதாவது ஒரு பொருளை முன்கூட்டியே போட்டுவிட்டு அந்த இடத்தில் மீண்டும் நின்று ரேஷன் பொருட்களை மக்கள் வாங்கிச் செல்வதை பார்த்து இருக்கிறோம் ஆனால் இங்கே காலணிகளை அடையாளம் வைத்து நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.

 

corona rescue in dindigul


திண்டுக்கல்லில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தொடக்கிவைத்து அங்குவந்த மக்களுக்கு இலவச உணவுகளை வழங்கினார். அதன்பின் தனது ஆதரவாளரான முன்னாள் கவுன்சிலர் மோகன் தனது கோபால் நகரில் உள்ள மக்களுக்கு, அமைச்சர் சீனிவாசன் மூலம் நிவாரண பொருட்கள் கொடுக்க இருந்தார். அதற்காக சமூக இடைவெளிக்கான வட்ட வடிவ அடையாளங்களும் அப்பகுதியில் உள்ள ரோட்டில் போடப்பட்டிருந்தது.
 

nakkheeran app



இந்த விஷயம் அப்பகுதி மக்களுக்கு தெரியவே உடனே குடி தண்ணீர் பிடிப்பதற்கு இடம் போடுவதுபோல் சமூக இடைவெளி விட்டு வட்டம் போட்டு உள்ள இடங்களில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள காலணிகளை கொண்டுவந்து அடையாளமாக வைத்து விட்டுச் சென்றனர். இப்படி ரோட்டில் அரை கிலோ மீட்டருக்கு  அடையாளம் போடப்பட்ட வட்டத்தில் காலணிகளாகவே காட்சியளித்தது. அதன்பின் 11 மணிக்குமேல் வந்த வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம், அப்பகுதி மக்கள் அந்த வட்டங்களில் நின்று நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகளை  வாங்கிச் சென்றனர்.

 

corona rescue in dindigul

 

அதன்பின் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஒட்டன்சத்திரம், பழனியிலுள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதை துவக்கி வைத்தார். இதில்  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர்  பாரதி முருகன், நகர அர்பன் பேங்க் தலைவர்  பிரேம் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் பெரும் பாலானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.